2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்றில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

உள்ளூராட்சி வாரத்தையொட்டி அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது,அக்கரைப்பற்று பாத்திமா பத்திரிகை விற்பனை நிலையத்துக்கு அருகிலுள்ள வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில்,மாநகர சபை கால்நடை வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.அம்துன், வேலை அத்தியட்சகர் கே.கணேசமூர்த்தி,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எல்.எம்.இர்பான்,கிராம உத்தியோகத்தர் ஜுனைடீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் 3ஆம் நாள் நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி நூலகத்தில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வருமான வரி அபிவிருத்தி தினம்,சுகாதார தினம்,கல்வி நூலக தினம்,சுற்றாடல் தினம்,பொதுமக்கள் தினமாகவும் இறுதி நாள் நிகழ்வாக விளையாட்டு  பரிசளிப்பு தினமாகவும் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .