2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனையில் செயலமர்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

விவசாய திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரதேச விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில்  அட்டாளைச்சேனை பிரதேச விவசாய போதானாசிரியர் ஏ.எச்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,அம்பாறை மாவட்ட விவசாய உதவிப்பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஸனீர், யூ.என்.டி.பி. உதவி திட்டமிடல் அதிகாரி குமாரி ரத்நாயக்க, விவசாய போதானாசிரியர்கள், விவசாய அமைப்பக்களின் தலைவர்கள், சமூகமட்ட தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்  அனுசரணையின் கீழ் அம்பாறை மாவட்ட விவசாய அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகள் தொடர்பான ஐந்து வருட செயற்திட்டம்  தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட விவசாய திணைக்களம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .