Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி பிரிவினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிமை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜனூஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பொத்துவில் பிரதேசத்தில் உள்ள 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன்,சமுக அபிவிருத்தி உதவியாளர் ஐ.சுதாகரன், கருத்திட்ட முகாமையாளர் ஏ.ஜி.அமானுல்லா,சமூக சேவை உத்தியோகத்தர் எல்.லுவிகரன்,திவிநெகும உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago