Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழர்களின் போராட்ட வரலாற்றை அழிந்தவர்கள், இன்று அம்பாறை மாவட்ட மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர்” என, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துக் கோவில்களின் ஒன்றியம் நடத்திய பொங்கல் விழா, ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று (08) நடைபெற்றது.
குறித்த ஒன்றியத்தின் தலைவர் மு.குழந்தைவடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “தமிழர்களின் அடையாளங்கள் பண்பாடுகள் அழிந்து கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில், இவ்வாறான இந்துகளின் பாரம்பரிய நிகழ்வுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கான அங்கிகாரத்தை வழங்கும்” எனக் கூறினார்.
கடந்த காலத்தில் தமிழர்களின் வாழ்வை, பேரினவாத சக்திகளுடன் இணைந்து அழிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், இன்று அம்பாறை மாவட்டத்தினுள் உள்நுழைந்திருக்கின்றனர் எனவும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்ற இவ்வாறான நிகழ்வுகள் கூட இடம்பெறக்கூடாது என்பதில் அவர்கள் அக்கறையுடன் உள்ளதாகவும் அவ்வாறு குறுகிய காழ்ப்புணர்ச்சி கொண்ட சிந்தனையுடன் இருக்கின்ற ஒரு சிலர் இணைந்து பொங்கல் விழாவை தடுப்பதற்கு முயற்சியை மேற்கொண்டதாகவும் அதனையும் தாண்டி இவ்விழா மக்களது ஒத்துழைப்பின் பேரில் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago