வி.சுகிர்தகுமார் / 2018 ஜூலை 21 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் தவணைப் பரீட்சையைப் பிற்போடுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றைய தினம் தமிழர்களுக்கு முக்கியத்துவம் மிக்க நாளான ஆடி பூரணை தினமாகவும் அதேவேளை, கிழக்கில் பிரசித்தி பெற்ற உகந்தை மற்றும் தாந்தாமலை முருகனின் தீர்த்தோற்சவ நாளாக இருப்பதனாலும் அன்றைய தின பரீட்சையைப் பிற்போடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆலய வழிபாட்டுக்காகச் செல்லும் அதிகளவான பெற்றோர்கள் தற்கால சூழ்நிலையில் தனியே தமது பிள்ளைகளை வீடுகளில் விட்டு செல்லமுடியாத நிலை காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே, குறித்த காரணங்களை கருத்திற்கொண்டு திருக்கோவில் கல்வி வலய அதிகாரிகள், பரீட்சையை ஒரு தினமேனும் பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களால் வேண்டுகோள் முன்வைக்கப்படுகின்றது.
5 minute ago
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 Jan 2026
24 Jan 2026