வி.சுகிர்தகுமார் / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் நேற்று (08) வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் ஆன்மீக அதிதியாக இந்தியா தபோவனம் ரிஷிகேசம் இமயமலை சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜும் பிரதம அதிதியாக நிதியமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினமும் கலந்துகொண்டனர்.
திருக்கோவில், ஏ.எஸ்.கே.திருவதிகைக் கலைக்கூடத்தின் வெளியீடாக வெளியிடப்பட்ட இந்த இறுவட்டிலுள்ள அனைத்துப் பாடல்களையும் திருக்கோவிலைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.கார்த்திகேசு எழுதி உருவாக்கியுள்ளதுடன், பாடல்களுக்கான இசையை பிரம்மஸ்ரீ.இரா. நீதிராஜசர்மா வழங்கியுள்ளார்.
பாடல்களை, கின்னஸ் பாடுநிலா உலகபுகழ் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஸ்டான்லி (இந்தியா) நிவாசின் சக்திவேல் (இந்திய) நீதிராஜசர்மா, நீ.குருபரன்சர்மா (இலங்கை) ஆகியோர் பாடியுள்ளனர்.
வெளியீட்டு விழாவில் நிதியமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் உள்ளிட்ட அதிதிகளால் இறுவட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன், முதல் பிரதியை, சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, ஆலய நிர்வாகத்தினரால் பாடலை எழுதி உருவாக்கிய ஊடகவியலாளர் ஏ.எஸ்.கார்த்திகேசு மற்றும் பாடல்களுக்கான இசையை வழங்கிய பிரம்மஸ்ரீ இரா. நீதிராஜசர்மா ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025