Janu / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஏற்பாட்டில் தேவையுடைய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் ‘அல்மா’ நிதியத்தின் உதவியுடன் ரமழானை முன்னிட்டு தேவையுடைய மக்களை அடையாளம்கண்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு , அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
ரமழானை முன்னிட்டு தேவையுடைய மக்களை அடையாளம் கண்டு ‘அல்மா’ நிதியத்தின் உதவியுடன் சுமார் 4500 ரூபாய் பொறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் இந் நிகழ்வில் வை.எம்.எம்.ஏ. இன் பல்வேறு மட்ட உறுப்பினர்களும் உதவிகளை பெற்றோரும் கலந்து கொண்டுள்ளனர்.
நூருல் ஹுதா உமர்
9 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 hours ago
02 May 2026