2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 நவம்பர் 19 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் 988 கிராம் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

மேலும், இவ் வழக்கு விசாரணை எதிர்வரும் 2017 ஜனவரி 03ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சம்மாந்துறை பொலிஸாரால் கடந்த புதன்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், 05 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .