2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கம்பத்துடன் மோதி கார் விபத்து

Princiya Dixci   / 2016 மே 22 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த கார், இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை 03 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள கம்பம் மற்றும் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த காரில் பயணித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த இருவரும் காரிலிருந்த காற்றுப்பை உதவியுடன் உயிர் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளனர்.

காரின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X