Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, அம்பாறை மாவட்டத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு திருக்கோவில், விநாயகபுரத்திலும் எதிர்வரும் 11ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு தமண பிரதேச செயலகத்திலும் எதிர்வரும் 13ஆம் திகதி காலை 09 மணிக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் மலை 03 மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்திலும் எதிர்வரும் 14ஆம் திகதி 08.2016 முற்பகல் 10 மணிக்கு உஹனவிலும் நடைபெறவுள்ளதென நல்லிணக்கத்துக்கான பொதுமக்களின் கருத்தறியும் அம்பாறை மாவட்ட வலய செயலணிக்குழு தெரிவித்தது.
இந்த அமர்வு தொடர்பான மேலதிக விவரங்களை செயலணிக்குழுவின் இணைப்பாளரின்; 0773017055 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற முடியுமென அச்செயலணிக்குழு தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
2 hours ago