2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனையில் அஸ்ரபின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி கல்முனைத் தொகுதிக்கான பிரதான வைபவம்  இன்று புதன்கிழமை காலை   கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது,திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஞாபகார்த்த உரை நிகழ்த்தியதுடன் கல்லூரி மௌலவி ஆசிரியர் எம்.பீ.எம்.நிஸ்தார் விசேட துவாப்பிரார்த்தனையை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .