2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

வி.சுகிர்தகுமார்   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு, இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 21 உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய பிரதேச செயலாளராகப் பதவியுயர்வு பெற்ற ரி.கஜேந்திரன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தராக பதவியேற்ற பரிமளவாணி சில்வெஸ்டர் உள்ளிட்ட 21 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

நிறைவாக பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களால், இடமாற்றம், ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கி.சோபிதா, மேலதிக மாவட்டப் பதிவாளர் மு.பிரதீப், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் அருந்ததி மகேஸ்வரன், பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரி.மோகனராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X