2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கைதிகளின் விடுதலைக்காக உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ் அரசியல்க் கைதிகளை விடுதலை செய்யக் கோரி நாளை சனிக்கிழமை  மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை மட்டக்களப்பிலும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை கல்முனையிலும் எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணசபைக்கு முன்பாகவும் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.ஏ.சில்வெஸ்டர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X