2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில், பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்ட விரோதமாக ஆற்று மணல் ஏற்றிய  இரு நபர்களில் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாயும் மற்றய நபருக்கு 20 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவான திருமதி நளினி கந்தசாமி நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர்கள் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்செய்தபோதே ஒருநபருக்கு 30 ஆயிரம் ரூபாயும் மற்றயை நபருக்கு 20 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X