2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் அனுமதிப் பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி இன்று (18) வியாழக்கிழமை விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் நேற்று (17) புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்படட நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (18) ஆஜர்செய்தபோதே 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X