2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக கடல் மண் ஏற்றியவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

சட்டவிரோதமாக அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடல் மண் ஏற்றிய 42 வயதுடைய நபரொருரை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று புதன்கிழமை (07) அதிகாலை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அக்கரைப்பற்று கடற்கரையில் உழவு இயந்திரத்தின் இழுவைப்பெட்டியில் கடல் மண் ஏற்றிக் கொண்டிருந்த நபரை கைது செய்ததுடன் மண் ஏற்றிய உழவு இயந்திரத்தையும் பெட்டியையும் கைப்பற்றியதாகவும் மேலும் தெரிவித்தனர்.  

கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X