2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சீரான நீர் விநியோகத்துக்கு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்; நீர் குறைந்தளவில் கிடைப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக செங்காமம், இன்ஸ்பெக்டெர்; ஏற்றம், உல்ல ஆகிய பிரதேசங்களில் குடிநீருக்காக மக்கள் இன்னலை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, ஏனைய இடங்களுக்கான நீர் விநியோகத் திட்டத்தைப் போன்று பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கும் நீர் விநியோகிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அக்கரைப்பற்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் கே.என்.கரீமிடம் கேட்டபோது, 'நாவலாற்றுப் பகுதியில் 05 குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு இவற்றின் மூலமாக பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது. தற்போது நீர் வற்றியுள்ளதால் குறைந்தளவு நீர் கிடைக்கின்றது. இதனால், போதுமானளவு நீரை விநியோகிக்க முடியாமலுள்ளது. இந்நிலையில், சில பிரதேசங்களுக்கு பவுசர் மூலம் குடிநீர்; விநியோகிக்கப்படுகின்றது' என்றார்.

இப்பிரதேச செயலகப் பிரிவுக்கு எதிர்காலத்தில் சீரான நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்காக பாரிய கிணறுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X