எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில், இன்று (22) தெரிவித்தார்.
டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலணி, சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், தெரிவித்தார்.
அத்துடன், டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், அவர் கேட்டுள்ளார்.
வெற்றுக் காணிகளை வைத்திருப்போர், ஒரு வார காலத்துக்குள் காணிகளைத் துப்பரவு செய்யுமாறும் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான இடங்களை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.
14 minute ago
16 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
37 minute ago
1 hours ago