Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற நடமாடும் சேவையில் காணிச் சுவீகரிப்பு மற்றும் அத்துமீறிய குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சட்டரீதியான தீர்வுகள் வழங்கப்பட்டன.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய, இதுகாலவரையிலும் தீர்க்கப்படாத காணி, காணிப்பங்கீடு, காணிச்சுவீகரிப்பு என்பன தொடர்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் காணிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையிலேயே இவ்வாறு தீர்வுகள் வழங்கப்பட்டன.
இந்நடமாடும் சேவைக்கு ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் நூறு தமிழ், முஸ்லிம் பொதுமக்கள் வருகை தந்ததிருந்தனர்.
ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட காணிச் சுவீகரிப்புக்கள் தொடர்பிலும் ஆலையடிவேம்பு மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைக் கிராமமான வாவாபுரம் பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய குடியேற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சட்டரீதியான தீர்வுகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களின் காணி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் இங்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
3 hours ago
4 hours ago