எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் ஸஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு, ஐந்து ஆண்டுகள் கொண்ட ஷரீஆ கற்கை நெறிக்காக புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (14) நடைபெறவுள்ளதாக, அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல். ஜலால்தீன் நேற்று (10) தெரிவித்தார்.
அல்-குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருத்தல், க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட 03 திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல், சிறந்த உடல் ஆரோக்கியமுடையவராகவும், 18 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்த வேண்டும்.
2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண பெறுபேறு பாடசாலை விடுகைப் பத்திரதம், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்குமாறு, அவர் கேட்டுள்ளார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago