2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் நீதிமன்ற வழக்குத் தவணைகளுக்கு செல்லாதிருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற பிடியாணை விடுக்கப்பட்ட ஒரு பெண் உட்பட ஐந்து பேரை  இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதலின்போது, மேற்படி ஐந்து நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

39, 23, 45, 32, 34 ஆகிய வயதுகளை உடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X