2025 ஜூன் 28, சனிக்கிழமை

நூல் வெளியீடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் எழுதிய 'நேர்முகத்தேர்வு தொடர்பான நுட்பங்களும் திறன்களும்' எனும் நுால் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியால அதிபர் ஏ.ஏ.அமீர் தலைமையில் நடைபெற்றது.

இதில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் நுாலின் முதற் பிரதியை நுாலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

நுால் விமர்சன உரையை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். நௌஷாத் நுால் பற்றிய கருத்துரையினையும் நிகழ்த்தினார்கள்.

ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நுாலாசிரியர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் வழங்கினார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர், கொழும்பு டொப் பிரிண்டஸ் தலைவர் சமீர் யுனுாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .