2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம்

Thipaan   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் இன்று சனிக்கிழமை (10) நடைபெற்றது.

மத்தியஸ்த சபையின் தவிசாளர் அஷ்ஷெய்க் ஏ. கலீலுர் றகுமான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொதுமக்கள் சமூக பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எம். அமீர் அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

காரைதீவு மத்தியஸ் சபைக்கு 29 தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X