2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதிய பஸ் சேவைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, இறக்காமத்துக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் நேரடி பாடசாலை பஸ் சேவையும் சம்மாந்துறையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு புதிய பஸ் சேவையும்  திங்கட்கிழமை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சாலை முகாமையாளர்; வை.எல்.எம்.தாஸீம் தெரிவித்தார்.  

இந்நிலையில், இறக்காமத்துக்கான பாடசாலை பஸ் சேவையில் தினமும் காலை 06.45 மணிக்கு சம்மாந்துறையிலிருந்து புறப்படும் பஸ், சம்மாந்துறை நெய்னாகாடு ஊடாக இறக்காமத்தை சென்றடையும். மீண்டும் இப்பஸ் இறக்காமத்திலிருந்து பிற்பகல் 01.45 மணிக்கு புறப்பட்டு நெய்னாகாடு ஊடாக சம்மாந்துறையை சென்றடையுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, சம்மாந்துறையிலிருந்து கட்டுநாயக்கவுக்கான பஸ் சேவையில் தினமும் காலை 06 மணிக்கு சம்மாந்துறையிலிருந்து புறப்படும் இப்பஸ், ஒலுவிலை சென்றடைந்து அங்கிருந்து கல்முனையூடாக மாலை 04.30 மணிக்கு கட்டுநாயக்காவை சென்றடையும். இதே பஸ் மறுநாள் காலை 07.30 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று ஊடாக சம்மாந்துறையை வந்தடையுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .