Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஜூலை 10 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பொத்துவில் பிரதேசத்தின் பாக்கியத்தை P -13 எனும் கிராம சேவையாளர் பிரிவு நேற்று (09) இரவு 8.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் கொரோனா விசேட தடுப்பு செயலணியினரின் விஷேட கூட்டம் பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.யு. அப்துல் சமட் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ் எம். அப்துல் மலிகின் ஒருங்கிணைப்பில் சுகாதார வைத்திய அதிகாரியின் கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள கிராம சேவையாளர் பிரிவில் வசிப்பவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வது மற்றும் வெளியிடங்களில் வாசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்துக்குள் பிரவேசிப்பது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
M
47 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago