Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2017 நவம்பர் 09 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சமூகத்தை விழிப்படையச் செய்யும் நோக்கில், விழிப்புணர் பேரணியொன்றை, கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலய மாணவர்களால் நடத்தப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ரி.பூவேந்திரன் தலைமையில் நேற்று (08) இந்த விழிப்புணர்புப் பேரணி இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகமும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வரும் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சிறுநீரக நோய்ப் பாதுகாப்பு, பிள்ளைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணி, பாடசாலையில் இருந்து சேனைக்குடியிருப்புப் பிரதான வீதியினூடாகச் சென்று, பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், இறுதியாகப் பாடசாலை மண்டபத்தை வந்தடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago