2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

சர்வதேச கைகழுவும் தினத்தை முன்னிட்டு பாடசாலைகளில் சுகாதாரப் பழக்கவழக்கங்களை மேப்படுத்தும் நோக்கில் வேள்ட் விசன் நிறுவனத்தின் நிதி உதவியின் மூலம் பாம் பவுண்டேசனின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளில்  சுகாதார முறைப்படி கைகழுவுதல் தொடர்பான கருத்தரங்கு வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இதனை பாம்பவுண்டேசன் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் மஞ்சுளா வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
நாவிதன்வெளி பிராந்திய பொதுச்சுகாதார பரிசோதகர்  ஏ.எச்.எம்.ஜாபீர்,பாடசாலையின் அதிபர் சி.பாலசிங்கன் உட்பட பலர் கலந்துகொணடனர்

இதேவேளை,இப்பிரதேசத்தில் பாம் பவுண்டேசனால் மலசலகூடம் மற்றும் விவசாயத்துக்காக சிறு குளங்களை புனரமைத்தல், குடும்பங்களுக்கும் சுகாதாரம் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .