Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீனோடைக்கட்டுக் கிராமத்திலுள்ள ஸ்ரீசித்திவிநாயகர் கோவில்க் காணியை விற்பனை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டதாக அக்கோவில்த் தலைவர் க.சிவயோகன் தெரிவித்தார்.
இது தொடர்பான பொதுக்கூட்டம், அக்கரைப்பற்று ஸ்ரீவம்மியடிப் பிள்ளையார் கோவில் ஒன்றுகூடல் மண்டபத்தில்; ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த மீனோடைக்கட்டுக் கிராமம் 1985ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தமிழ் மக்களும் இடம்பெயர்ந்திருந்தனர்.
இந்நிலையில், அவர்களின் காணிகள் முஸ்லிம் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால், கோவிலுக்குச் சொந்தமான காணி மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோவில்க் காணியை மீள்பரிசீலனைக்குட்படுத்தி விற்பனை செய்வதுடன், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வேறொரு கோவிலுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் அங்கு நாம் மீள்குடியேற முடியாது. எனவே, கோவிலுக்குச் சொந்தமான இக்காணியை விற்பனை செய்து பிறிதொரு நற்காரியத்துக்கு பயன்படுத்துவது சிறந்ததெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago