2025 ஜூன் 25, புதன்கிழமை

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னம்பிள்ளைக் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்மாந்துறை புளக் 'ஜே' மேற்கு முதலாம் பிரிவில் வசித்து வந்த கூலித்தொழிலாளியும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான அலியார் முகம்மது இப்றாஹீம் (வயது 57) என்பரே இவ்வாறு உயிரிழந்தார்.

தென்னம்பிள்ளைக் கிராமத்தில் அமைந்துள்ள செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருக்கின்ற போதே இவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .