Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
அம்பாறை, கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, அப்பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை (02) நடைபெற்றது.
இதன்போது 56 பேருக்கு தலா 24,000 ரூபாய் படி இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மாதமொன்றுக்கு 3,000 ரூபாய் படி எட்டு மாதங்களுக்கான கொடுப்பனவே கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் வழங்கப்பட்து.
இந்த கொடுப்பனவுகளை பிரதேச செயலாளர் கே.லவநாதன் வழங்கிவைத்தார். இந்த நிகழ்வில் சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் பொன். சுந்தரராஜன், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.சுதானந்தன், அனர்த்த சேவைகள் நிவாரண அபிவிருத்தி உத்தியோகஸ்;தர் எஸ்.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago