2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி ஒருவர் காயம்

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பிரதான வீதியின் கூழாவடிக்கு அண்மித்த பகுதியில் நேற்று அதிகாலை  காட்டு  யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி ஒருவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் பனங்காடு பிரதேசத்தைச்  சேர்த்த  இ.இராஜகோபால்(வயது 60) என்பவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இவர் அதிகாலை தனது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக வயலுக்கு சென்று கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அமைந்திருந்த வியாபாரக் கடைகளும்  யானையினால் சேதமாக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X