2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வடபகுதி முஸ்லிம்களுக்காக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 02 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் விசாரணை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாக முன்றலில் எதிர்வரும் புதன்கிழமை (04) காலை 09 மணிக்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

இந்த ஒன்றுகூடலுக்கான அழைப்பை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பு விடுத்துள்ளது.

வடபகுதியிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. வின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைப் பொறிமுறையில் உட்படுத்தப்படாமை எமக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.

இந்த முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்தையும் ஐ.நா. அமைப்பையும் ஆவண செய்யுமாறு வலியுறுத்துவதாகவும் மேற்படி அமைப்பு தெரிவித்தது.

எமது உறவுகளுக்காக குரல் கொடுக்கவும் அவர்களுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவும் அனைவரையும் அழைப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .