Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்
இவ்வாண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதத்துக்கான வீட்டுச் சீட்டிழுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு பிரதேச செயலக நிர்வாகப் பிரதேசத்தில் வசிக்கும் 06 பயனாளிகளுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில், காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து இன்று (23)இவை வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் அச்சுமுஹம்மட், முகாமைத்துவப் பணிப்பாளர் யு.எல் ஏ.ஹமீட், வங்கி முகாமையாளர் எஸ்.எஸ்.சதீஸ், வலய உதவி முகாமையாளர் வி.சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
10 minute ago
17 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
21 minute ago
1 hours ago