2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை நகரின் அக்கரைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒற்றையடிப்பாதையில் ஒரே பக்கமாக பயணித்த இரு மேட்டார் சைக்கில்களும் ஒன்றோடு ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயங்களுக்குள்ளான இருவரும் ஆபத்தான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .