Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் 23 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக பவுசர்களில் குடிநீர் விநியோகித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் புதன்கிழமை தெரிவித்தார்.
பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி இறக்காமம், அம்பாறை நாமலோயா, லாகுகல, பதியத்தலாவ, மஹாஓயா, உகண ஆகிய பிரதேச செயலாளர் பிரிகளிலுள்ள மக்களே வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத்துக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அம்பாறை மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 1.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
26 Jun 2025