Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
தனி நபரினாலோ அல்லது குழுக்களினாலோ ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது. அனைவரினதும் ஒத்துழைப்புக்; காரணமாகவே உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்தமுடிந்துள்ளதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் திணைக்களத்தின் 60 வருடப் பூர்த்தியையிட்டு சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்மா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனநாயக வழிமுறைகளில் நாம் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். சிங்களம், அரபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நாம் கேட்டாலும், கேட்கின்ற விடயம் ஒன்று. அது ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே ஆகும்' என்றார்.
'சகல மதத்தவர்களும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்பது ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தை சகல மதங்களும் வலியுறுத்துகின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago