Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
எதிர்வரும் பருவகால மழையின்போது, கல்முனை மாநகரப் பிரதேசங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி வேலைத்திட்டத்தின் வடிகான் சுத்திகரிப்பு மூலம் கட்டுப்படுத்த முடியுமென மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் சனிக்கிழமை (17) மாலை இடம்பெற்ற வடிகான் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின்போதே, அவர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் பருவகால மழையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணசபை மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி வேலைத்திட்டத்தின் கீழ், அனைத்துப் பிரதேசங்களிலும் வடிகான்களை சுத்திகரிப்பு செய்யும் மூன்று நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago