2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கள்ளு வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் கள்ளு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 06 நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி நேற்று புதன்கிழமை விதித்துள்ளார்.

கல்முனை மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர்கள் செவ்வாய்க்கிழமை (09) கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்செய்த போதே 06 நபர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X