2025 ஜூன் 25, புதன்கிழமை

“டெங்கொழிப்பு நடவடிக்கைக்கு மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

டெங்கொழிப்பு நடவடிக்கையில் மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தி அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜௌபர் தெரிவித்தார்.

டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி நேற்று திங்கட்கிழமை ஒலுவில் அல்- ஜாயிஸா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் எமது பிரதேசத்தில் டெங்கு பரவாமல் தடுப்பதற்கு உங்களது ஒத்துழைப்பும், ஆலோசணைகளும் இன்றியமையாததாக காணப்படுகின்றது.

வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப்புறச் சூழலை கண்காணிப்பதோடு வீதிகளிலோ பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை நாமாக முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .