Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வசந்த சந்திரபால
தனது காணிக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி அம்பாறை,உகன பிரதேச செயலகத்தின் கூரையின் மேலேறி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவமொன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
உகன பிரதேசத்தைச் சேர்ந்த என்.பியதாச என்பவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
உகன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார குறித்த நபரிடம் பேச முற்பட்டபோது,'பல ஆண்டுகளாக இந்த காணி குறித்த தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அழைந்து திரிவதாகவும் தீர்வு கிடைக்கும் வரையில் தான் கூரையிலிருந்து இறங்கப் போவதில்லை எனவும் பெற்றுத்தராத பட்சத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
குறித்த காணி பிரச்சினை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலக தலைவர் உறுதிமொழி வழங்கியதையடுத்து குறித்த நபர் கூரையிலிருந்து இறங்கினார்.
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago