2025 மே 19, திங்கட்கிழமை

புத்தகங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு கல்வி அறிவு சார்ந்த புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கான திட்டம், கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் ஏற்பாட்டில் ஆசிய மன்றத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 10 இலட்சத்து 75 ரூபாய் பெறுமதியில் 2,200 புத்தங்களை மேற்படி 4 வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு   வழங்கவுள்ளதாக ஆசிய மன்றத்தின் செயற்றிட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக கல்முனைக் கல்வி வலயத்துக்குட்பட்ட 12 பாடசாலைகளுக்கு 1,200 புத்தகங்கள், மருதமுனை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வைத்து  நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளன.  

க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கடந்தகால வினா, விடைப் புத்தகங்கள், ஆங்கில பயிற்சிப் புத்தகங்கள், கணினி அறிவுப் புத்தகங்கள், சிறுவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களே வழங்கப்படவுள்ளன.  

இதேவேளை கல்முனை, மருதமுனை, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள நூலகங்களுக்கும் இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரண்டாம் கட்டமாக ஏனைய 3 வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு 1,000 புத்தகங்கள் கூடிய விரைவில் வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X