2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பாலமுனை கமநலச் சேவை நிலையத்தில் காணப்பட்ட முகாம்கள் அகற்றப்பட்டன'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள பாலமுனை கமநலச் சேவை நிலையக் கட்டடங்களில் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட விசேட அதிரடிப்படை, இராணுவ முகாம்கள்; மற்றும் பொலிஸ் உப நிலையம் அகற்றப்பட்டு, கமநலச் சேவைகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கமநலச் சேவை பிரதேச உத்தியோகஸ்தர் ஏ.எல்.அஸ்ரப், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், பாலமுனை கமநலச் சேவை நிலையம் ஒலுவிலில் திங்கட்கிழமை (08) முதல் இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

முகாம்களும் பொலிஸ் உப நிலையமும் காணப்பட்ட காலப்பகுதியில் பாலமுனை கமநலச் சேவை நிலையம்  பாலமுனைக் கிராமத்தில் இயங்கிவந்தது. தற்போது இக்கமநலச் சேவை நிலையம் ஒலுவிலுக்கு நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்நிலையத்தினால் பாலமுனை, ஒலுவில் பிரதேச விவசாயிகள் பெரிதும்  நன்மையடைவார்கள் எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X