2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மருதமுனை றோயல் விளையாட்டு கழகத்தின் 25ஆவது வருட பூர்த்தி விழா

Super User   / 2011 நவம்பர் 06 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மருதமுனை றோயல் விளையாட்டு கழகத்தின் 25ஆவது வருட பூர்த்தி விழா நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை இரவு மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு பரிசளிப்பு, றோயல் சமூக சேவை பிரிவு ஆரம்பித்து வைப்பு, மருதமுனை பிரதேசத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு, கல்வி சேவை பிரிவு ஆரம்பித்து வைப்பு, கழக கீத இருவெட்டு வெளியீடு மற்றும் வீரர்கள் கௌரவிப்பு போன்ற நிகழ்வுகளை இந்த விழா உள்ளடக்கியிருந்தது.

கழகத்தின் தலைவர் ஏ.சி.அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் கல்முனை பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜலீல், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட பதிவாளர் எம்.எம்.கிபத்துல் கரீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • Nafeel Monday, 07 November 2011 02:52 AM

    அட இப்படியும் ஒரு கழகம் இருப்பது இன்றுதான் தெரியும்.

    Reply : 0       0

    fazil Monday, 07 November 2011 03:24 PM

    சுகிர்டீன்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    kalmunaiyaan Monday, 07 November 2011 08:58 PM

    அனுபவி தலைவா......அனுபவி.....

    Reply : 0       0

    kalanthar Tuesday, 08 November 2011 04:07 PM

    மருதமுனையில் இப்படி ஒரு கழகம் எங்கே உள்ளது ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .