Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட மகாஓயா கல்வி வலயத்திலுள்ள 28 பாடசாலைகளில் அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் எந்தவொரு மாணவரும் சித்தியடையவில்லை என பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டிலிருந்து கல்வித் துறையில் பல சாதனைகளைப் புரிந்த இந்த வலயப் பாடசாலைகள் 2009 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக வீழ்ச்சிப் பாதையில் சென்று, இன்று மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக பியதாச எனும் 46 வயதுடைய பெற்றாரொருவர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தப் பிரதேச அதிபர்களும் ஆசிரியர்களும் எவ்வளவு தான் முயற்சி எடுத்த போதிலும் மகாஓயா கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாமலே உள்ளது என்றார் அவர்.
"மகாஓயா கல்வி வலயத்தில் உள்ள 34 பாடசாலைகளுள் 28 பாடசாலைகளில் எந்தவொரு மாணவரும் சித்தியடையவில்லை என்பது ஒரு சிறிய விடயமல்ல.
இப்பிரதேசத்தில் வாழும் அனேகமான குடும்பங்கள் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் கூலி வேலைகள் செய்தே தமது வாழ்க்கை நடத்துகின்றனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகள் சித்தியடைந்தால் ஓரளவு எமது சுமை குறையும் என்று எதிர்பார்த்தோம்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண பரீட்சையில் கணித பாடம் சித்தியடைய தவறியதன் காரணமாக உயர்தர பிரிவில் கல்வி கற்க முடியாத நிலைமை அதிகமான மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக கிழக்கு மாகாண கல்வியமைச்சருக்கும் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமை கவலைக்குரிய விடயம் என" அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
59 minute ago
2 hours ago