2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சமயத் தலைவர்களுக்கான சமாதான மாநாடு

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்ட சமயத் தலைவர்களுக்கான சமாதான மாநாடு சமாதான கற்கைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலமையில் அம்பாறை நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் சகல மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பல்லின சமூக அமைப்புகளின் தலைவர்கள், மெர்சிக் கோர்ப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டீ கொலுபா மற்றும் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சமயத் தலைவர்களின் சமாதான உரைகள் இடம் பெற்றதுடன், இனங்களுக்கிடையில் எவ்வாறு நல்லிணக்கத்தினையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவது என ஆராயப்பட்டது.

சகல மதத்தினரும் சகல மொழிகளையும் கற்க வேண்டும் என இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .