2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மருதமுனையில் மருத்துவ பரிசோதனை நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், மருதமுனை அல் ஹம்றா வித்தியாலய மாணவர்களுக்கு சுகாதார மருத்துவப் பரிசோதனை வழங்கும் நிகழ்வு நேற்று வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பசால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சுகாதார மருத்துவப் பரிசோதனையில் 170 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பாடசாலை மாணவர்களிடையே சுகாதாரத்தினையும், ஆரோக்கியத்தினையும் மேம்படுத்தும் பொருட்டு இவ்வாறான செயற்பாடுகளை தாம் மேற்கொண்டு வருவதாக டொக்டர் பசால் 'தமிழ்மிரருக்கு' தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .