Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 11 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தமும் காலநிலையும் தற்போது சீரடைய ஆரம்பித்ததும் சாய்ந்தமருது பிரதேசத்தில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தமது ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மீண்டும் கடலுக்குள் இன்று கொண்டு சென்றனர்.
பாரிய இயந்திரத்தின் மூலமாகவும் மற்றும் மனித வலுவின் உதவியுடனும் கரையில் கடந்த மூன்று மாத காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்த படகுகள் மிகவும் அதிகமான பணச்செலவில் கடலுக்குள் செலுத்தப்பட்டது.
கல்முனை பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியாளர்களின் விலை மதிப்புள்ள படகுகளை சாதகமற்ற காலங்களில் பாதுகாப்பாக தரித்து வைப்பதற்கு இதுவரை படகு தரிப்பிடம் ஒன்றில்லாத காரணத்தினால் வாழைச்சேனை மற்றும் வாகரை போன்ற இடங்களுக்கு படகுகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago