2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு

Super User   / 2011 மார்ச் 06 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.மாறன்)


கல்முனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள்களை சந்திக்கும் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விஞ்ஞாபனமும் வெளியீடப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களுக்கு மேலும் அதிகாரங்களைக் பகிர்ந்தளிக்க (உதாரணமாக இங்கிலாந்தின் கவுன்ரி கவுன்ஸில்) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயளாலர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், பொன் செல்வராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .