Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் 2010ஆம் ஆண்டிற்கான கலாசார விழாவும் 'பசுமை' நூல் வெளியீட்டு விழாவும் இன்று நாவிதன்வெளி பிரதேசசெயலக மன்றத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர்; எம்.கோபாலரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் நாவிதன்வெளி பிரதேச வேல்ட்விசன் அமைப்பின் முகாமையாளர் இருதயம் மைக்கல், மாவட்ட கலாசார ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், கலாநிதி கே.கோணேஸ்பிள்ளை, இறக்காமம் பிரதேச செயலாளர் ரிபா ஜலீல் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேசத்திற்கு சேவையாற்றிய 6 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
பிறப்பு இறப்பு பதிவாளர் முருகேசு நவரத்தினம், ஊடகவியலாளர் உமறுகத்தா முஹம்மட் இஸ்ஹாக், ஊடகவியலாளர் அப்துல் சத்தார் முஹம்மது முஜாஹித், ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார் முஹம்மது ஹனீபா, ஆயுள்வேத வைத்தியர் முஹம்மது ஹனி முஹம்மது ஹுஸைன், நாவிதன்வெளி பிரதேச வேல்ட் விசன் அமைப்பின் முகாமையாளர் இருதயம் மைக்கல் ஆகியோரே இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
08 Jun 2025