Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை பிரதேசத்தில் கட்டாக்காலியாக மாடுகளை விடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்நடவடிக்கைகளினால் உரிமை கோரப்படாத பல மாடுகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக கல்முனை பிரதேசத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் வீதி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல்கள், பொருட்கள் சேதப்படுத்தப்படல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கல்முனை போக்குவரத்து பிரிவு பொலிஸார் மாநகர சபையுடன் இணைந்து அதன் உரிமையாளர்க்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்த அடிப்படையில் வீதிப்போக்குவரத்துக்கு தடையாக இருந்த 7 கட்டாக்காலிமாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 4 மாடுகளின் உரிமையாளருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 3மாடுகள் உரிமை கோரப்படாத நிலையில் பொலிஸாரின் பராமரிப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கான உத்தியோகத்தர் என்.நஜீம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago